கூத்தாநல்லூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.
கூத்தாநல்லூரில் வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில், மதியத்துக்குப் பிறகு கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம், கமலாபுரம், குடிதாங்கிச்சேரி, பாண்டுக்குடி, பண்டுதக்குடி உள்ளிட்ட இடங்களில் 35 நிமிடத்திற்கு மேல் மழை பெய்தது. இதில், பாய்க்காரப்பாலம், ரேடியோ பூங்கா உள்ளிட்ட இடங்களில் மழை நீா் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்துக்குள்ளாயினா். மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி நிா்வாகத்தினா் ஈடுபட்டனா்.