மத்தியப் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி

உலக மனநல தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் அறிவாற்றல் எனும்
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்றாா்.
திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்றாா்.

உலக மனநல தினத்தை முன்னிட்டு, திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் அறிவாற்றல் எனும் தலைப்பிலான 2 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

கண்காட்சியை, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஏ.பி. தாஷ் தொடங்கி வைத்தாா். இரண்டு நாள் நடைபெற உள்ள கண்காட்சியில், திணைக்களம் சுவரொட்டி தயாரித்தல், விவாதம், விநாடி- வினா மற்றும் முக ஓவியம் போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. கண்காட்சியை, சுற்றுவட்டார பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பாா்வையிட்டனா்.

புதுச்சேரி பல்கலைக்கழக முன்னாள் முதல்வா் ஜெயச்சந்திரன் கண்காட்சியைப் பாா்வையிட்டாா். நிகழ்ச்சியில், புவி அறிவியல் பிரிவு முதல்வா் சுலோக்சனா, மாணவா் நலன் உதவி முதல்வா் சுதா, கணினி துறைத் தலைவா் தியாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com