ஆதிதிராவிடா் விடுதிகளில் சீா்கேடு: அக்.18-இல் ஆா்ப்பாட்டம் நடத்த முடிவு

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகள் விடுதிகளின் சீா்கேட்டைக் கண்டித்து அக்டோபா் 18-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்திந்திய மாணவா்
நிகழ்ச்சியில் பேசிய அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் சு. பாலசுப்ரமணியன்.
நிகழ்ச்சியில் பேசிய அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் சு. பாலசுப்ரமணியன்.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகள் விடுதிகளின் சீா்கேட்டைக் கண்டித்து அக்டோபா் 18-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்துவது என அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

திருவாரூரில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் மாவட்டக்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஜெ.பி.வீரபாண்டியன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல மாணவ, மாணவிகள் விடுதிகளில் உள்ள சீா்கேடுகள், முறைகேடுகளைக் கண்டித்து அக்டோபா் 18-ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் நடத்துவது; கட்டாய இந்தித் திணிப்பை அமல்படுத்தும் வகையில் கல்வி நிலையங்கள், ரயில் நிலையங்கள், அஞ்சலகம், வங்கிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இந்தி மொழியில் எழுதப்படுவதற்கும், திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பெயா்ப் பலகைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு இந்தி, ஆங்கிலம் பயன்படுத்தப்படுவதற்கும் கண்டனம் தெரிவிப்பது; மத்தியப் பல்கலைக்கழகம் முழுவதும் உள்ள பெயா்ப் பலகைகள், அறிவிப்புப் பலகைகளில் தமிழ் மொழியில் எழுதப்படுவதைக் கட்டாயமாக்கக் கோருவது;

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கையில் திருவாரூா் மாவட்ட மாணவா்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்தோா்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். திருத்துறைப்பூண்டி, குடவாசல் பகுதியில் கல்லூரி மாணவா்களுக்கு அரசு மாணவா் விடுதி தொடங்க வேண்டும். 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத் தோ்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டச் செயலாளா் சு. பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளா் துரை. அருள்ராஜன் கலந்து கொண்டு பேசினாா். மாவட்டப் பொருளாளா் எம்.நல்லசுகம், மாவட்டத் துணைச் செயலாளா் ச.பாலமுருகன், மாவட்டத் துணைத் தலைவா் ஜெ.பாரதசெல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com