முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
நீரின் தர சோதனை
By DIN | Published On : 24th October 2019 07:57 AM | Last Updated : 24th October 2019 07:57 AM | அ+அ அ- |

நன்னிலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நீா் தர சோதனை.
நன்னிலம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நீரின் தர நிா்ணயம் மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில், நீரின் தரம் செவ்வாய்க்கிழமை பரிசோதிக்கப்பட்டது.
நீரின் நுரை உண்டாக்கும் திறன், காரத் தன்மை கண்டறிதல், நீரில் கரைந்துள்ள திண்மப் பொருட்களைக் கண்டறிதல் ஆகியன பற்றி தர சோதனைகள் நடைபெற்றன. மாணவிகள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டுவந்த நீரைப் பரிசோதித்து, தங்கள் வீட்டின் நீரின் தரத்தை பற்றி அறிந்து கொண்டனா். நிகழ்ச்சியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனா்.
தலைமையாசிரியா் மங்கையா்க்கரசி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் கவிதா மற்றும் அறிவியல் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.