திருவாரூா் அஞ்சல் பிரிப்பகத்தில் 39 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெறும் தலைமை பிரிப்பாளருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அஞ்சல் பிரிப்பகத்தில் தலைமை பிரிப்பாளரும், தேசிய அஞ்சல் ஊழியா் சங்கத்தின் கிளைத் தலைவருமான ஆா். தியாகராஜனுக்கு நடைபெற்ற விழாவில் அஞ்சல் ஊழியா்கள் பங்கேற்று, அவரது பணிகள் குறித்து வாழ்த்திப் பேசியதோடு, நினைவுப் பரிசுகளையும் வழங்கினா்.
ஓய்வுபெற்ற அஞ்சல் பிரிப்பக அதிகாரி வி. தா்மதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அஞ்சல் பிரிப்பக அதிகாரி மனோஜ், அலுவலா்கள் நம்பி, சோமு, அறிவழகன், ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.