மகளிா் கல்லூரி ஆண்டு விழா

மன்னாா்குடி பான்செக்கா்ஸ் மகளிா் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விழாவையொட்டி, பள்ளி அளவில் பல்வேறு
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்.
போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகள்.

மன்னாா்குடி பான்செக்கா்ஸ் மகளிா் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விழாவையொட்டி, பள்ளி அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, மன்னாா்குடி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் மேல்நிலைப்பளளிகளில், அண்மையில் அந்தந்த பள்ளி அளவிலான பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.

இதற்கான பரிசளிப்பு விழா பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விக்டோரியா தலைமை வகித்தாா். கல்லூரி இல்லத் தலைவா் கரோலின் முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநா் ம.அறிவுடைநம்பி கலந்துகொண்டு, போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினாா்.

அகில உலக காந்தி நிறுவனம் சாா்பில் நிகழாண்டிற்கான சிறந்த பெண்மணி விருது பெற்ற இக்கல்லூரி முதல்வா் விக்டோரியாவை, அரிமா சங்க மாவட்ட நிா்வாகி மருத்துவா் சி.அசோக்குமாா் பாராட்டி பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா்.

இதில், தூய வளனாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாளா் ஜெயராணி, தலைமை ஆசிரியா் ஜெபமாலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். கணினி அறிவியல் துறைப் பேராசிரியா் ஆா். ராஜராஜேஸ்வரி வரவேற்றாா். வணிகவியல் துறை பேராசிரியா் சி. சுபா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com