அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி உயிரிழப்பு

திருவாரூர் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சலவைத் தொழிலாளி மின்சாரம் தாக்கி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

திருவாரூர் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த சலவைத் தொழிலாளி மின்சாரம் தாக்கி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
  திருவாரூர் அருகே உள்ள தென்னவராயநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (57). சலவைத் தொழிலாளியான இவருக்கு சுசீலா (42) என்ற மனைவியும், அரவிந்த் (25) என்ற மகனும், அனுசுயா (22) என்ற மகளும் உள்ளனர். இவர் அவ்வப்போது ஆடு மேய்ப்பது வழக்கம். இதன்படி, வியாழக்கிழமை மாலை தனது ஆடுகளை வயலில் மேய்க்கச் சென்றபோது, அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விட்டதாகக் கூறப்படுகிறது.  இதில், மின்சாரம் பாய்ந்த மோகன், அவ்விடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற அவரது நாயும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த மின்கம்பி கடந்த 15 நாள்களாக வயல்வெளியில் அறுந்து கிடக்கிறது.  இதுகுறித்து மின்வாரியத்துக்கு  பலமுறை தெரிவித்து விட்டோம். ஆனால், மின்கம்பியை அகற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மின்வாரியத்தின் அலட்சியத்தினாலேயே மோகன் உயிரிழந்தார். எனவே, அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com