நாளை பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறை தீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறை தீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில், திருவாரூர் வட்டம், சோழங்கநல்லூரில் திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் வட்டம், பனங்காட்டாங்குடியில் திருவாரூர் சரக துணைப் பதிவாளர் தலைமையிலும், குடவாசல் வட்டம், பெரும்பண்ணையூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் வட்டம், கேத்தனூரில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டம், அனுமந்தபுரத்தில் திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மன்னார்குடி வட்டம், வாட்டாரில் மன்னார்குடி வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டம், பின்னத்தூரில் மன்னார்குடி சரக துணைப் பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் வட்டம், பூந்தாழங்குடியில் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை லிட். துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையிலும், பொது விநியோகத் திட்ட சிறப்பு பொதுமக்கள் குறைகேட்கும் கூட்டம் நடைபெற உள்ளது. 
 செப்டம்பர் 14-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ள இக்கூட்டத்தில், தொடர்புடைய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவை குறித்தும், கடை மாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்தும் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com