மன்னார்குடியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
மேலராஜ வீதி பெரியார் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி தேரடி, ருக்குமணிபாளையம் நடுத்தெரு, பேருந்து நிலையம், பந்தலடி, காந்தி சாலை, மூன்றாம் தெரு, மகா மரியம்மன் கோயில் தெரு, பாலகிருஷ்ணா நகர், நடேசன் தெரு வழியாக வழியாக சென்று மீண்டும் பெரியார் சிலையை அடைந்தது.
இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தின் மன்னார்குடி நகரத் தலைவர் முஸ்தபா ரூமி, செயலர் சிராஜுதீன், பொருளாளர் முகமது ஜவ்வாது, துணைத் தலைவர் அப்துல் ஹாதி, துணைச்செயலர் பதுருல் இஸ்லாம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.