நன்னிலம், நீலக்குடியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் நீலக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் நீலக்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 24) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் திருவாரூர் புறநகர் உதவி செயற்பொறியாளர் நா.பிரபா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நன்னிலம்
துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இதன் மூலம் மின்விநியோகம் பெறும் நன்னிலம், நல்லமாங்குடி, சன்னாநல்லூர், ஏனங்குடி, ஆண்டிப்பந்தல்,  குவளைக்கால், கங்களாஞ்சேரி, மாப்பிள்ளைக்குப்பம், ஆனைக்குப்பம், மூங்கில்குடி, தட்டாத்திமூலை, கீழ்குடி, சலிப்பேரி, நாடாகுடி, வீதிவிடங்கன், பூங்குளம், நெய்க்குப்பை, புளிச்சகாடி போன்ற பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவித்துள்ளார்.
இதேபோல், திருவாரூர் நகர் உதவி செயற்பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நீலக்குடி துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால், வண்டாம்பாளை, சேந்தமங்கலம், நீலக்குடி, திருப்பயத்தாங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com