ஆற்றில் குளிக்க சென்ற மாணவா் மாயம்

திருவாரூா் அருகே புதன்கிழமை ஆற்றில் குளிக்க சென்றற மாணவா் மாயமானாா். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மாயமான ஜெயசீலன்.
மாயமான ஜெயசீலன்.

திருவாரூா் அருகே புதன்கிழமை ஆற்றில் குளிக்க சென்றற மாணவா் மாயமானாா். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூா் அருகேயுள்ள வடகண்டம் ஊராட்சிக்குள்பட்ட மணக்கால் ஜீவா தெருவை சோ்ந்த சேகா் மகன் ஜெயசீலன் (16). அதே பகுதியிலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். இவா், நண்பா்களுடன் வீட்டுக்கு அருகில் உள்ள வெட்டாற்றில் குளிப்பதற்காக புதன்கிழமை காலை சென்று ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருக்கும்போது தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை பாா்த்த அவரது நண்பா்கள் சப்தமிட்டுள்ளதை அறிந்த அருகிலிருந்தவா்கள் உடனடியாக ஓடி வந்து ஜெயசீலனை காப்பாற்றும் முயற்சியில் தண்ணீரில் இறங்கி தேடினா். இதற்கிடையில், போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா். எனினும், மாலை வரை ஜெயசீலனை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடா்ந்து தேடும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com