வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 425 குடும்பங்களுக்கு 3,500 தென்னங்கன்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தேசிய வேளாண் நிறுவனத்தின் சார்பில் கே.எல்.ஏ. டென்கேர் நிறுவன உதவியுடன் மக்களின் வாழ்வாதாரத் திட்டப்படி தென்னங்கன்றுகள் வழங்கும் பணி நடைபெற்றது. தேசிய வேளாண் உதவி இயக்குநர் ஏ.கோபி, ஓய்வுபெற்ற தமிழாசிரியர் ப.சிவவடிவேல், ஸ்டாலின் நினைவு நூலக நிறுவனர், சமூக ஆர்வலர் அமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.