தரங்கம்பாடி வட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கோரி அரசை வலியுறுத்தி, 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.
சங்கத்தின் வட்டத் தலைவர் வீ.எம்.சரவணன் தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தை முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் சிங்காரவேலன், வட்டச் செயலாளர் கே.பி.மார்க்ஸ், நிர்வாகிகள் சாமித்துரை, பவுல்சத்தியராஜ் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தில்லையாடி, திருக்கடையூர், காழியப்பநல்லூர், ஆக்கூர், காளகஸ்திநாதபுரம், செம்பனார்கோவில், மேமாத்தூர், கடலி, திருவிளையாட்டம், கொத்தங்குடி, நல்லாடை வழியாக சென்ற பிரசாரப் பயணம் சங்கரன்பந்தல் கடைவீதியில் நிறைவடைந்தது. சங்கத்தின் முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பி. சீனிவாசன் நிறைவுரையாற்றினார்.