சேலத்தில் கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டம்: திருவாரூர் கிளையினர் பங்கேற்க முடிவு

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலத்தில் திங்கள்கிழமை நடைபெறும் உண்ணாவிரதப்


தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் சேலத்தில் திங்கள்கிழமை நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது என சங்கத்தின் திருவாரூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் முடிவு செய்துள்னர்.
இதுகுறித்து, சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.எஸ். வெங்கடேசன் கூறியது: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின்  ஓய்வூதியம் உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 16- ஆம் தேதி முதல் துறை மற்றும் மத்திய வங்கி கேட்கும் புள்ளி விவரங்களை வழங்குவதில்லை. ஆய்வுக் கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை. 23-ஆம் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்து வருகிறோம். 
மேலும், சேலத்தில் திங்கள்கிழமை (செப்டம்பர் 30) உண்ணாவிரதமும், அக்டோபர் 14-ஆ ம் தேதி மதுரையில் பேரணியும், 21-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டமும், 25-ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டமும் நடத்த உள்ளோம்.
சேலத்தில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com