திருவாரூர் மாவட்ட அரசு காஜிக்குப் பாராட்டு விழா

தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட அரசு காஜி ஏ.எஸ்.எம். சர்தார் முஹ்யித்தீனுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.


தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாரூர் மாவட்ட அரசு காஜி ஏ.எஸ்.எம். சர்தார் முஹ்யித்தீனுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் மன்ப உல் உலா சபையின் சார்பில்,  மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி, பரக்கத் ஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மன்ப உல் உலா சபைத் தலைவரும், முன்னாள் நகர் மன்றத் தலைவருமான எல்.எம். முஹம்மது அஷ்ரப் தலைமை வகித்தார். செயலாளர் வி.ஏ.எம். ஜெஹபர்தீன் வரவேற்றார். பெரியப்பள்ளி வாயில் தலைவர் என்.எம்.ஏ. சிகாபுதீன், கூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரபிக் கல்லூரி நாஜிர், மேலப்பள்ளி வாயில் தலைவர் கே.என்.எம். ஜெஹபர்தீன், கே.ஏ. பாவா அஹமது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் டி.எம். பஷீர் அஹமது உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.   
விழாவில், திருவாரூர் மாவட்ட அரசு காஜி மௌலான மௌலவி அல்ஹாஜ் ஏ.எஸ்.எம்.சர்தார் முஹ்யித்தீனுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதில், அத்திக்கடை வாஹிது பாத்திமா அரபிக் கல்லூரி முதல்வர் ஏ.பௌஜ் அப்துர் ரஹீம், திருவாரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் டி.எம்.ஏ.முஹம்மது இல்யாஸ், மன்ப உல் உலா அரபிக் கல்லூரி முதல்வர் ஏ.எப். முஹம்மது அலி, பெரியப்பள்ளி வாயில் செயலாளர் ஷேக் அப்துல் காதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி தாளாளர் தி.மு. தமீஜூத்தின் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், அûனைத்து இமாம்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com