சீர்காழியை அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொதுமக்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு சித்த மருத்துவமனை சார்பில் நிலவேம்பு குடிநீர் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
சட்டநாதபுரத்தில் எல்எம்சி மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாமில், டெங்கு விழிப்புணர்வுப் பேரணி மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், சித்த மருத்துவர் ஷாகுல் ஹமீது, மருந்தாளுநர் தாமரைச்செல்வி ஆகியோர் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, நிலவேம்பு குடிநீர் வழங்கினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கே.விஜய் அமிர்தராஜ், ஆசிரியர் சதீஷ் ஆகியோர் பங்கேற்றனர்.