திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசுவரர் கோயில் பிரம்ம தீர்த்தத்தில் மகாளய அமாவாசையையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, பிறவி மருந்தீசுவரர் கோயிலிலிருந்து அஸ்திரதேவர் பிரம்ம தீர்த்தத்துக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, தீர்த்தவாரி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, தங்களது முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.