பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில், பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், வழக்குரைஞர் மார்ட்டின் சாந்தோம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திய சட்டமும், நவீன பெண்களும் என்ற தலைப்பில் கலந்துரையாடினர். நிகழ்ச்சியில், அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். பெண்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், ஆங்கிலத்துறை உதவி பேராசிரியருமான ஜெ.மதுமிதஸ்ரீ நன்றி கூறினார்.