குத்தாலம் தெற்கு ஒன்றிய ஊராட்சிக்குள்பட்ட பொதுமக்களிடம் பூம்புகார் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் சனிக்கிழமை குறைகளைக் கேட்டறிந்தார்.
குத்தாலம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கோமல், பேராவூர், காஞ்சிவாய், கருப்பூர், பருத்திக்குடி, கோடிமங்கலம், சிவனாகரம், கோனேரிராஜபுரம் ஆகிய ஊராட்சிகளில் மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில் எம்எல்ஏ எஸ். பவுன்ராஜ் கலந்துகொண்டு குறைகளைக் கேட்டறிந்தார்.
இதில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி சர்க்கரை ஆலை தலைவர் என்.தமிழரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன், வட்டார பொறியாளர் இளமுருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரபாகரன், ஜார்ஜ் பெர்ணான்டஸ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சதக்கத்துல்லா, இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.