மண்டல அளவிலான பூப்பந்தாட்டம்: ஏவிசி பாலிடெக்னிக் மாணவர்கள் சாதனை

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி. பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் மண்டல அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.


மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏ.வி.சி. பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவர்கள் மண்டல அளவிலான பூப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டி கடலூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. 
இதில் ஏ.வி.சி பாலிடெக்னிக் கல்லூரி அணி சார்பில் மெக்கானிக்கல் மற்றும் இ.சி.இ. மூன்றாமாண்டு மாணவர்கள் எஸ்.பிரவீன், எஸ்.ஹரிசங்கர், எம்.சந்தோஷ், கே.கெளதம், டி.சந்தோஷ், பி.விக்னேஷ், ஆர்.மணிஷ்குமார், இ.சி.இ மற்றும் இ.இ.இ இரண்டாமாண்டு மாணவர்கள் ஆர்.சூர்யா, கே.முகமதுகேப்பிப், கே.அரவிந்த்குமார் ஆகியோர் பங்கேற்று, மண்டல அளவில் இரண்டாம் பிடித்து வெள்ளிப்பதக்கம் மற்றும் சுழற்கோப்பை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
போட்டிகளில் பரிசுகள் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ள மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் பி.விவேகானந்தன் ஆகியோரை கல்லூரியின் ஆட்சிமன்றக்குழு தலைவர் 
என்.விஜயரெங்கன், செயலர் கே.கார்த்திகேயன், பொருளாளர் என்.ஞானசுந்தர், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், இயக்குநர் ஏ.வளவன், முதல்வர் எஸ்.கண்ணன், பொறுப்பு முதல்வர் ஆர்.கே.என். அம்பிகாபதி, பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com