மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என மூவேந்தர் முன்னேற்றக் கழக கூட்டத்தில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீர்காழியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, நகரச் செயாலாளர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் காளிமுத்து, மாவட்டத் தலைவர் செல்வம், ஒன்றியச் செயலாளர்கள் ராஜேந்திரன், ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருநகரி முன்னாள் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பாபு வரவேற்றார். இதில், தேவர் ஜயந்தி விழாவில் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் தேவர் பெயரை சூட்ட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, மதுரை கோரிபாளையம் தேவர் சிலையில் இருந்து மூமுக தலைவர் ஸ்ரீதர் வாண்டயார் தலைமையில் நடைபெறவுள்ள பேரணியில் திரளாக கலந்துகொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.