திருவெண்காட்டில் அம்பேத்கர் அரசு பணியாளர்கள் கூட்டமைப்பின் ஐந்தாம் ஆண்டு விழா மற்றும் 10, 12-ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் சுந்தரவடிவேல் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். செயலாளர் கலைச்செல்வன், ஆசிரியைகள் லீலாவதி, மகாலட்சுமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். பொருளாளர் திருமுருகன் நன்றி கூறினார். இதில் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.