மின்னணு கழிவுகளை துப்புரவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தல்

வேதாரண்யம் நகராட்சியில் வீடுகள், நிறுவனங்களில் சேகரமாகும் மின்னணு கழிவுகளைத் தனியாக பிரித்து துப்புரவுத் தொழிலாளர்களிடம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.


வேதாரண்யம் நகராட்சியில் வீடுகள், நிறுவனங்களில் சேகரமாகும் மின்னணு கழிவுகளைத் தனியாக பிரித்து துப்புரவுத் தொழிலாளர்களிடம் வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வேதாரண்யம் நகராட்சி ஆணையர் என்.ஆர். ரவிச்சந்தின் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
 வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரமாகும் மின்னணு கழிவுகளைப் பிரித்து, அதற்கென அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே கொட்ட வேண்டும். பொது மக்களுக்கு இடையூறாகவோ, சுகாதாரக் கேடு ஏற்படும் வகையிலோ பொது இடத்தில் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகர வீதிகளில் கால்நடைகளை மேய விட்டு போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்பட்டுத்துவதை தடுக்க கால்நடைகளை அதன் வளர்ப்பாளர்களின் இடங்களில் பராமரித்துக் கொள்ள 
அறுவுறுத்தப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com