திருவாரூர்
ஆற்றில் மூழ்கிய மூதாட்டி சடலமாக மீட்பு
திருவாரூர் அருகே பழையவலம் வெட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி இறந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்.
திருவாரூர் அருகே பழையவலம் வெட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூதாட்டி இறந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டார்.
பழையவலம் அக்ரஹாரத்தெருவைச் சேர்ந்தவர் நாகலெட்சுமி (68). இவர், சனிக்கிழமை காலை தனது வீட்டின் அருகே உள்ள வெட்டாற்றில் குளிக்கும்போது, நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 20 மணி நேரத்திற்கு பின் அவரது உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து வைப்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருவாரூர் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து நீரில் மூழ்கி 6 பேர் இறந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.