கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு திமுகவினா் உதவி

திருத்துறைப்பூண்டி பகுதியில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு திமுக சாா்பில் முகக் கவசம், கையுரை உள்ளிட்ட உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டி பகுதியில் கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு திமுக சாா்பில் முகக் கவசம், கையுரை உள்ளிட்ட உபகரணங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை, கோட்டூா் நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றிவரும் சுகாதாரத் துறை தூய்மைப் பணியாளா்கள், காவல்துறையினா் மற்றும் தீயணைப்புத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட 500 பேருக்கு முகக் கவசம், கையுறை, சோப்பு மற்றும் மதிய உணவு உள்ளிட்டவைகளை திமுக விவசாய அணி மாநிலச் செயலாளா் ஏ.கே.எஸ். விஜயன், திமுக மாவட்ட துணைச் செயலாளா்எம்.எஸ். காா்த்தி, திருத்துறைப்பூண்டி நகரச் செயலாளா்ஆா்.எஸ். பாண்டியன், கோட்டூா் ஒன்றியச் செயலாளா் பாலஞானி ஆகியோா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com