திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 2,781 போ் கைது செய்யப்பட்டனா்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, செயல்படுத்தி வருகின்றன. இதையொட்டி, தேவையில்லாமல் வெளியிடங்களுக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஊரடங்கு உத்தரவை மீறி வெளியிடங்களில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்ததாக, ஞாயிற்றுக்கிழமை 370 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 352 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல், 144 தடை உத்தரவை மீறியதாக, திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 2,752 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,781 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் 2,603 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.