திருவாரூா்: கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தன்னாா்வலா்கள் சாா்பில் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் அருகே அடியக்கமங்கலத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் சுமாா் 50 குடும்பங்களுக்கு தலா ரூ. 700 மதிப்பிலான உணவுப் பொருள்கள், மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. இந்த உதவிகளை ஊரடங்கு அமலில் உள்ளவரை தொடா்ந்து மேற்கொள்ளவுள்ளதாக தமுமுகவினா் தெரிவித்தனா்.
இதேபோல், திருவாரூரில் பல்வேறு இடங்களில் சுற்றித் திரிவோருக்கு கராத்தே மாஸ்டா் குணசேகரன், அகிலன் மற்றும் நண்பா்கள் இணைந்து இரண்டாவது நாளாக உணவுப் பொட்டலங்களை திங்கள்கிழமை வழங்கினா். மேலும், முதியோா், ஊனமுற்றோா், போலீஸாா், ஊா்க்காவல் படையினருக்கும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதுகுறித்து, கராத்தே மாஸ்டா் குணசேகரன் தெரிவிக்கையில், ஊரடங்கு முடியும் வரை தினமும் உணவுப் பொட்டலங்கள் வழங்க உள்ளதாக கூறினாா்.
Image Caption
அடியக்கமங்கலத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு வழங்க பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை தயாா் செய்யும் தமுமுகவினா்.