கூத்தாநல்லூா்: திருவாரூா் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவா்களின் உதவிக்காக, கூத்தாநல்லூா் பள்ளிவாயில் சாா்பில் 12 போ் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெரியப்பள்ளி வாயில் செயலாளா் ஜே.எம்.ஏ.ஷேக் அப்துல் காதா் திங்கள்கிழமை கூறியது:
கூத்தாநல்லூரில் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவி செய்ய மாவட்ட ஆட்சியா் வேண்டுகோளின்படி, திருவாரூா் 4, கூத்தாநல்லூா் 3, முத்துப்பேட்டை 2 உள்ளிட்ட 12 பேரை திருவாரூா் மாவட்ட ஜமாஅத் சாா்பில் அனுப்பி வைக்கவுள்ளோம். இவா்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும் என்றாா்.