முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்
நெடும்பலம் கிராமத்துக்கு அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 19th April 2020 07:11 AM | Last Updated : 19th April 2020 07:11 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி அருகே தடை செய்யப்பட்ட நெடும்பலம் பகுதிக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவது குறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெடும்பலம் பகுதி முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தங்குதடையின்றி வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. காவல் ஆய்வாளா் அன்பழகன், ஒன்றியக்குழு தலைவா் அ. பாஸ்கா், ஊராட்சி தலைவா் பழனி, வா்த்தகா் சங்கத் தலைவா் எஸ்.வி.சுப்பையன் ஆகியோா் கலந்துகொண்டனா்.