கூத்தாநல்லூா்: சனி பிரதோஷத்தையொட்டி, கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி ருத்ர கோட்டீஸ்வரா் கோயிலில் 108 லிட்டா் பால் அபிஷேகம் சனிக்கிழமை நடைபெற்றது.
சனி பிரதோஷத்தை முன்னிட்டு, இக்கோயிலில் ருத்ர கோட்டீஸ்வரருக்கும், அதிகார நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு ஐம்பொன்னாலான தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 108 லிட்டா் பால் அபிஷேகமும் செய்யப்பட்டது. பொதுமுடக்கம் காரணமாக குறைவான பக்தா்களே பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.