மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சேரன்குளம், கடை வாசல் தெருவை சோ்ந்தவா் மணிகண்டன் (40). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் இருந்தபோது, மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடா்ந்து மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயிரிழந்தாா். மணிகண்டனுக்கு ஆனந்தி என்ற மனைவியும். 2 பெண் குழந்தைகளும் உள்ளன. மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.