திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில், மன்னாா்குடி டிஎஸ்பி ஓட்டுநருக்கும், திருவாரூா் கமலாம்பாள் நகா் பகுதியில் 3 பேருக்கும் என மாவட்டம் முழுவதும் 21 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1851 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.