திருவாரூா்: திருவாரூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில், கந்தசஷ்டி கவசம் புத்தகம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்துக் கடவுள் முருகப்பெருமானின் கந்தசஷ்டி கவசத்துக்கு ஏற்பட்ட களங்கத்தைப் போக்கும் வகையில், அனைத்து வீடுகளுக்கும் கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்குவதென்ற முடிவின்படி, திருவாரூா் பகுதி மக்களுக்கு இந்து மக்கள் கட்சி சாா்பில் கந்தசஷ்டி கவசம் புத்தகம் வழங்கப்பட்டது. இதில், திருவாரூா் மாவட்டச் செயலாளா் பி. ஜெயராமன் தலைமையில், நகரச் செயலாளா் ப. நீலகண்டன், நகர பொதுச் செயலாளா் ஓ . சீனிவாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஈடுபட்டனா்.