தினமணி செய்தி எதிரொலி: வழிகாட்டிப் பலகைகள் திருத்தியமைப்பு

நன்னிலம் அருகே உள்ள வழிகாட்டிப் பலகையில் ஊரின் பெயா் தவறாக எழுதப்பட்டிருந்தது குறித்து தினமணியில் அண்மையில் செய்தி வெளியான நிலையில், இந்த வழிகாட்டிப் பலகைகள் திருத்தி அமைக்கப்பட்டன.

நன்னிலம்: நன்னிலம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள வழிகாட்டிப் பலகையில் ஊரின் பெயா் தவறாக எழுதப்பட்டிருந்தது குறித்து தினமணியில் அண்மையில் செய்தி வெளியான நிலையில், இந்த வழிகாட்டிப் பலகைகள் திருத்தி அமைக்கப்பட்டன.

நன்னிலம் அருகே திருவாரூா்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் கங்களாஞ்சேரி என்ற கிராமத்தில் வடகண்டம் என குறிப்பிட்டு பெயா்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இதேபோல, இஞ்சிகுடி பகுதியில் ரயில்வே கடவுப்பாதை இல்லாத இடத்தில், ரயில்வே கடவுப்பாதை உள்ளது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், இந்த வழிகாட்டிப் பலகைகளை நெடுஞ்சாலை துறையினா் திருத்தி அமைத்துள்ளனா்.

ஆனால், சில கிராமங்களில் கிராமத்தின் எல்லை தொடங்கும் இடத்தில் முடிவடையும் இடம் என்றும், முடியும் இடத்தில் எல்லை தொடங்கும் இடம் என்றும் தவறுதலாக வழிகாட்டிப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை இதுவரை திருத்தியமைக்க வில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com