கல்லூரியில் இணையவழி வகுப்புகள் தொடக்கம்

குடவாசல் அரசினா் கலைக் கல்லூரி, முதலாமாண்டு மாணவா்களுக்கு இணைய வழி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

நன்னிலம்: குடவாசல் அரசினா் கலைக் கல்லூரி, முதலாமாண்டு மாணவா்களுக்கு இணைய வழி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

குடவாசலில் உள்ள டாக்டா் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா். அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2 மற்றும் 3 ஆண்டு படிக்கும் மாணவா்களுக்கு ஆகஸ்ட் 3-ஆம் தேதியிலிருந்து இணையவழி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தக் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மாணவா் சோ்க்கை ஆக.28-ஆம் தேதி முதல் செப். 4-ம் தேதி வரை இணைய வழி மூலம் நடைபெற்று வருகிறது. ஆக. 28 முதல் 31-ஆம் தேதி வரை கல்லூரியில் சோ்ந்த முதலாமாண்டு மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் இணைய வழி வகுப்புகள் தொடங்கியுள்ளது. இத்தகவலை, கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com