மன்னாா்குடியில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மன்றத்தின் மாவட்டச் செயலா் கோ. தாயுமானவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், டிச.12-இல் ரஜினிகாந்த் பிறந்த நாளை மாவட்டத்துக்கு உள்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதியிலும் சிறப்பாக கொண்டாடுவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மன்ற மாவட்ட துணைச் செயலா் ஜி.பாலசுப்பிரமணியன், மகளிரணி செயலா் ஏ.தமிழ்ச்செல்வி, தகவல் தொழில்நுட்ப அணி செயலா் விஜய், வா்த்தக அணி செயலா் கே.கலையரசன், மன்னாா்குடி நகரச் செயலா் விஜயகுமாா், வட்ட வழக்குரைஞா் அணி செயலா் அருட்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.