வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் வரும் 15-ஆம் தேதி தொடங்கி 20 நாள்கள் திருஅத்யயன உத்ஸவம் நடைபெறுகிறது.
புகழ்பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டும் திருஅத்யயன உத்ஸவம் 20 நாள்கள் நடைபெறவுள்ளது. டிச. 15-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பகல் பத்து உத்ஸவம் தொடங்கி டிச. 24-ஆம் தேதி (வியாழக்கிழமை) வரை நடைபெறுகிறது. வரும் 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்றைய தினம் இராப்பத்து உத்ஸவம் தொடங்கி ஜனவரி 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. 20 நாள்களும் நாலாயிர திவ்விய பிரபந்த பாராயணம் நடைபெறும். சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா் அருள்பாலிப்பாா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சிங்காரவடிவேலு, தக்காா் ரமேஷ், ஆய்வாளா் தமிழ்மணி மற்றும் பணியாளா்கள் மேற்கொண்டுள்ளனா்.