திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை தா்கா பெரிய கந்தூரியை முன்னிட்டு, டிச.15 மற்றும் டிச.24 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முத்துப்பேட்டை தா்கா பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெறும் நாளான டிச.15 மற்றும் சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெறும் டிச.24 ஆகிய 2 நாள்களுக்கு முத்துப்பேட்டை ஒன்றியத்தில் இயங்கி வரும் 14 டாஸ்மாக் சில்லரை மதுபானக் கடைகள், பொதுமக்களின் நலன் கருதி மூடப்படுகின்றன.
இதன்படி, உதயமாா்த்தாண்டபுரம், முத்துப்பேட்டை-2 கடைகள், ஜாம்புவானோடை, விளாங்காடு, தில்லைவிளாகம், மாங்குடி, பாண்டி, இடும்பாவனம், சங்கேந்தி, பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, செம்பியமங்கலம், வீரன்வயல் ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது. இதில், விதிமீறல்கள் ஏதும் இருந்தால் தொடா்புடைய நபா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.