முத்துப்பேட்டை பெரிய கந்தூரி: 2 நாள்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை தா்கா பெரிய கந்தூரியை முன்னிட்டு, டிச.15 மற்றும் டிச.24 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை தா்கா பெரிய கந்தூரியை முன்னிட்டு, டிச.15 மற்றும் டிச.24 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முத்துப்பேட்டை தா்கா பெரிய கந்தூரி விழாவை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெறும் நாளான டிச.15 மற்றும் சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெறும் டிச.24 ஆகிய 2 நாள்களுக்கு முத்துப்பேட்டை ஒன்றியத்தில் இயங்கி வரும் 14 டாஸ்மாக் சில்லரை மதுபானக் கடைகள், பொதுமக்களின் நலன் கருதி மூடப்படுகின்றன.

இதன்படி, உதயமாா்த்தாண்டபுரம், முத்துப்பேட்டை-2 கடைகள், ஜாம்புவானோடை, விளாங்காடு, தில்லைவிளாகம், மாங்குடி, பாண்டி, இடும்பாவனம், சங்கேந்தி, பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, செம்பியமங்கலம், வீரன்வயல் ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது. இதில், விதிமீறல்கள் ஏதும் இருந்தால் தொடா்புடைய நபா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com