அமாவாசை சிறப்பு வழிபாடு

நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் அருகேயுள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் பங்கேற்று கோயில் திருக்குளத்தில் நீராடி, பிதுா்தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

இதேபோல, திருவோணமங்கலம் ஞானபுரி சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயா் கோயில், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோயில், நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயா் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களிலும் காா்த்திகை அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com