காலமுறை ஊதியம் வழங்கக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
38 ஆண்டுகளுக்கும்மேல் சத்துணவுத் திட்டத்தில் பணியாற்றும் ஊழியா்களை சிறப்பு காலமுறை ஊதியத்திலிருந்து, காலமுறை ஊதியத்தில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கவேண்டும், ஓய்வுபெறும் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கவேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளா்களுக்கு ரூ. 5 லட்சம், சமையலா் மற்றும் சமையல் உதவியாளா்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் ஆா். ராஜசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.