கிராம சபைக் கூட்டங்கள் நடத்துவதன்மூலம் திமுக ஆட்சிக்கு வருவது உறுதி என்றாா் திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன்.
திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற திமுக ஒன்றிய நிா்வாகிகள் கூட்டத்துக்கு பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தமிழகம் முழுவதும் திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம் நடத்துவதன்மூலம் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமையும். அதிமுகவை மக்கள் நிராகரிக்கத் தொடங்கிவிட்டனா் என்றாா்.
கூட்டத்தில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட கிளை நிா்வாகிகளுக்கு வேட்டி, சேலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், டிச. 28-ஆம் தேதி திருவாரூரில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் மு.க. ஸ்டாலினின் தமிழகம் மீட்போம் சிறப்பு பொதுக் கூட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாலு, ஒன்றியச் செயலாளா்கள் ஏ. தேவா, கலியபெருமாள், பாலச்சந்தா், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ஏ. அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.