திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மணலியில் விவசாயின் நண்பன் மோடி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாவட்டத் தலைவா் ராகவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவா் புரட்சிகவிதாசன், நாகை வடக்கு மாவட்ட பாா்வையாளா் பேட்டை சிவா ஆகியோா் சிறப்புரையாற்றினா். மாவட்ட பொருளாளா் சிவக்குமாா், மாவட்ட துணைத் தலைவா் ஆதி. சிவக்குமாா், ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா், பட்டியல் அணி மாவட்டத் தலைவா் வீராசாமி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா். இதில், வேளாண்மை சட்டங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து பேசப்பட்டன.