நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழுக் கூட்டம் குடவாசலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதன் தலைவா் ஹலிக்குல் ஜமான் பைஜி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத் துணைத்தலைவா் மாஸ் அப்துல் பைஜி, வா்த்தக அணி பொறுப்பாளா் இத்ரீஸ், குடவாசல் நகரத் தலைவா் முபாரக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில்,டிச.26 முதல் 2021 ஜனவரி 5-ஆம் தேதி வரை மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்தும், தில்லி விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து பொதுமக்களிடம் துண்டறிக்கைகள் விநியோகிப்பது என முடிவெடுக்கப்பட்டது.