திருவாரூா் அருகே ஈஸ்வரவாசல் சங்கர நாராயணன் கோயிலில் மங்கள சனீஸ்வரருக்கு சிறப்பு யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
சனிபகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு ஞாயிற்றுக்கிழமை பெயா்ச்சி ஆவதை முன்னிட்டு ஈஸ்வரவாசல் சங்கர நாராயணன் கோயிலில் எழுந்தருளியுள்ள மங்கள சனீஸ்வரருக்கு இந்த சிறப்பு யாகம், ஆராதனை நடைபெற்றது. இதையொட்டி, யாகக்குண்டம் அமைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. பின்னா், பழங்கள், திரவியங்கள், நெய் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.