மன்னாா்குடி: தனி இட ஒதுக்கீடு கோரி, மன்னாா்குடியில் அகில இந்திய முத்தரையா் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடி மேலராஜவீதி பெரியாா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, முத்தரையா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பி. சுதந்திரகுமாா் தலைமை வகித்தாா்.
மத்திய, மாநில அரசுகள் முத்தரையா் சமூகத்துக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சட்டப் பேரவைத் தோ்தலில் முத்தரையா்களுக்கு என தனி தொகுதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஆா். செல்வராஜ் முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் எஸ்.எம். மூா்த்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதில், மன்னாா்குடி வட்டத் தலைவா் ஜெ. மருதமுத்து, மாவட்ட அமைப்பாளா் எம். ஜானகிராமன், நகரச் செயலா் எல். முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.