சத்துணவு அமைப்பாளா்களுக்கு உணவு பாதுகாப்பு விளக்கப் பயிற்சி குடவாசலில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவா் கிளாராசெந்தில் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில் தஞ்சாவூா் இந்திய உணவுக் கழகத்தின் இணைப் பேராசிரியா் வி.சந்திரசேக கலந்துகொண்டு, பயிற்சியளித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் கோ.ஆறுமுகம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இரா.சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.