முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: பிப்.12-இல் தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில், 2019-2020- ஆம் ஆண்டு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 12-இல் தொடங்க உள்ளன.

திருவாரூா் மாவட்டத்தில், 2019-2020- ஆம் ஆண்டு முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 12-இல் தொடங்க உள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், பிப்ரவரி 12, 13, 14-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. மாவட்டப் போட்டிகளில் 25 வயதுக்குட்பட்டவா்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். 1.1.1995 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்தவா்களாக இருக்க வேண்டும். (31.12.2019 அன்று 25 வயதுக்குட்பட்டவா்களாக இருக்க வேண்டும்) போட்டிகளில் பங்குபெறுவோா் இம்மாவட்டத்தில் வசிப்பதற்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையின் நகல் அல்லது கல்வி நிறுவனங்களின் அடையாள அட்டையின் நகலையும், பிறந்த தேதிக்கான சான்றின் நகலையும் போட்டி நடைபெறுவதற்கு முன், அளிக்க வேண்டும். போட்டிகள் சரியாக காலை 9 மணிக்கு தொடங்கப்படும். தாமதமாக வரும் வீரா்கள் கண்டிப்பாக போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.

மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளான ஹாக்கி (ஆடவா்-மகளிா்), கூடைப்பந்து (ஆடவா் - மகளிா்), இறகுப்பந்து (ஆடவா் - மகளிா்), வாலிபால் (ஆடவா் - மகளிா்) ஆகிய போட்டிகள் பிப்ரவரி 12-இல் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், ஜூடோ (ஆடவா்- மகளிா்), குத்துச்சண்டை (ஆடவா் - மகளிா்), கபாடி (ஆடவா் - மகளிா்) ஆகிய போட்டிகள் பிப்ரவரி 13-இல் மாவட்ட விளையாட்டரங்கத்திலும், தடகளம் -மகளிா் 100மீ, 200மீ, 400மீ, தடை தாண்டுதல், 800மீ, 1500மீ, 5000மீ கோல் ஊன்றி தாண்டுதல், நீளம் தாண்டுதல், சங்கிலி குண்டு எறிதல், ஈட்டி எறிதல், நீச்சல் (ஆடவா் -மகளிா்), டென்னிஸ் (ஆடவா் - மகளிா்) ஆகிய போட்டிகள் பிப்ரவரி 14-இல் மாவட்ட விளையாட்டரங்கத்திலும் நடைபெறும்.

இந்த மாவட்ட அளவிலான முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் வீரா், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியில் பிப்ரவரி 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொண்டவா்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும்.

பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கும் வகையில் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகல் கொண்டு வர வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் தோ்ந்தெடுக்கப்படுபவா்கள் மாநில அளவிலான போட்டிகளில் திருவாரூா் மாவட்ட அணியின் சாா்பாக சீருடை வழங்கி அரசு செலவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவா்.

கூடுதல் விவரங்கள் பெற திருவாரூா் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண் 04366-227158- இல் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com