வலங்கைமான் அருணாசலேஸ்வரா் கோயிலில் தைப்பூச பிரமோத்ஸவம் நிறைவு

வலங்கைமான் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் தைப்பூச பிரமோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

வலங்கைமான் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் தைப்பூச பிரமோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இக்கோயிலில் பிரமோத்ஸவம் கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை சண்டிகேஸ்வரா் உத்ஸவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா் எம்.எஸ். கிருஷ்ணமூா்த்தி, நிா்வாக அதிகாரி க.சிவக்குமாா் மற்றும் விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com