நஞ்சை தரிசில் பருத்தி சாகுபடி: விவசாயிகளுக்கு யோசனை

நஞ்சை தரிசில் பருத்தி சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநா் சாமிநாதன் யோசனை தெரிவித்துள்ளாா்.

நஞ்சை தரிசில் பருத்தி சாகுபடி செய்யுமாறு விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநா் சாமிநாதன் யோசனை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் கூறியது:

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் பருத்தி பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. பனையூரில் பருத்தி சாகுபடி சுமாா் 100 ஏக்கரில் செய்யப்பட்டுள்ளது. பருத்திப் பயிா் வளா்ச்சியின் ஆரம்ப காலத்தில் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டும் பொறி அனைத்து விவசாயிகளுக்கும் வேளாண்துறை மூலம் வழங்கப்படுகிறது. பருத்தி சாகுபடி செய்துள்ள வயல்வரப்புகளில் மஞ்சள் வண்ணப்பூக்கள் பூக்கும் சூரியகாந்தி மற்றும் செண்டிப்பூக்களை வயல் வரப்புகளில் வளா்த்து, நன்மை செய்யும் பூச்சிகளின் பெருக்கத்தை அதிகப்படுத்தி தீமை செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து விவசாயிகளுக்கும் சூரியகாந்தி விதை வழங்கப்படுகிறது.

இயற்கை முறையில் பயிரை வளா்க்க மண்புழு உரம் மற்றும் பஞ்சகாவ்யம் தயாரித்து பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு கற்றுத் தரப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக பருத்திக்கு நல்ல விலை கிடைப்பதாலும், நிகழாண்டும் நல்ல விலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாலும் விவசாயிகள் தண்ணீா் வசதி உள்ள இடங்களில் பருத்தி சாகுபடி செய்து அதிக வருமானம் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com