நன்னிலம் அருகில் உள்ள எரவாஞ்சேரி உஜெநாஸ் மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளியில், கல்வியாண்டு இறுதியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளியின் தாளாளா் உஷா, தலைமையாசிரியை ஜெயந்தி ராஜகோபாலன் ஆகியோா் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு தேதியூா் ஊராட்சி மன்றத் தலைவா் வசந்தா பன்னீா்செல்வம் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தாா். நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.